states

img

நவம்பர் 4-6: குமரியில் சிஐடியு மாநில மாநாடு லட்சம் தொழிலாளர்களின் அணிவகுப்புக்கு உழைக்கும் மக்களின் உற்சாக ஏற்பாடு

நாகர்கோவில், அக்.30- 32 ஆண்டுகளுக்குப் பிறகு குமரி  மாவட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப்போரில் முன்னிலை வகிக்கும் இந்திய தொழிற்சங்க மைய த்தின் (சிஐடியு) மாநில மாநாடு நவம்பர்  4முதல் 6 வரை  நடைபெற உள்ளது.   மாநிலம் முழுவதில் இருந்தும் வரும் தொழிலாளி வர்க்கத்தினரை வரவேற்ப தற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.     குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு 1989 ஆம் ஆண்டு சிஐடியு மாநில மாநாடு நடைபெற்றது. 32 ஆண்டு களுக்கு பிறகு  நவம்பர் 4,5,6 ஆகிய தேதி களில் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நகரில், தோழர் கே.வைத்தியநாதன் நினைவரங்கில் (புனித பீட்டர் மையம்), சிஐடியு  15 ஆவது தமிழ்நாடு  மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு நுழைவு வாயில் தோழர் மைதிலி சிவராமன் பெயரில் அமைய உள்ளது.  நவம்பர் 4 காலை 9 மணிக்கு  கொடி, தியாகிகள் கூடர் வரவேற்புக்கு பிறகு மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டுக் கொடி ஏற்றுகிறார். காலை 10 மணிக்கு துவங்கும் பொது மாநாட்டுக்கு மாநில தலைவர் ஏ.சவுந்தர ராஜன் தலைமை வகிக்கிறார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.  பிரதிநிதிகள் மாநாட்டை மாலை 3.30க்கு சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா துவக்கி வைத்து உரையாற்றுகிறார். ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி தொழிற்சங்க தலைவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேச உள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி மாலை 3 மணி க்கு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இருந்து லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கும் செம்படைப்பேரணி நடை பெற உள்ளது.  தோழர்கள் எம்.ராஜாங்கம், டி.என்.நம்பிராஜன் நினைவுத் திடலில் (நாகராஜா திடல், நாகர்கோவில்) பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. இதற்கான நுழைவு வாயில் தோழர்.ஏ.ஜி.காசிநாதன் பெய ரில் அமைய உள்ளது. பொதுக்கூட்ட த்தில் அகில இந்திய, மாநில தலை வர்கள் உரையாற்ற உள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக் க்கான ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி மாநாட்டுச் செய்தியை தொழிலாளர்கள் மத்தியிலும் மக்க ளிடத்திலும் கொண்டு சென்றுள்ளனர். மார்த்தாண்டம் ஒய்எம்சிஏ திடலில் செந்தொண்டர் அணிவகுப்புக்கான பயிற்சியை மதுரையில் இருந்து வந்து சரவணகுமார், செந்தில் ஆகி யோர் கடந்த சில நாட்களாக அளித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மலைப் பகுதிகள் முதல் கடற்கரை வரை மாநாட்டுச் செய்திகள் சுவர் களை அலங்கரித்துள்ளன. அக்டோபர்  29 சனியன்று கன்னியாகுமரியில் நடந்த மாநாட்டு நிதி வசூலில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்றார். வியா பாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் நிதி அளித்தனர்.

மினி மாரத்தான் போட்டி

மாநாட்டையொட்டி நவம்பர் 2 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ மாண வியருக்கான மினி மாரத்தான் போட்டி  வெட்டூர்ணிமடம் சிஐடியு அலுவல கம் அருகில் இருந்து அண்ணா விளை யாட்டரங்கம் வரை நடைபெற உள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி  வைக்கிறார். வெற்றி பெற்றவர்களுக்கு நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் பரிசளிக்கிறார்.

80 தியாகச் சுடர்கள் சங்கமம்

குமரி மாவட்டத்தில் தொழிலாளி வர்க்க நலன்களுக்காக போராடி மறைந்த தலைவர்களின் நினைவாக கொண்டுவரப்படும் சுமார் 80 சுடர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரி முனையில் சங்கமிக்க உள்ளன. மக்கள் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்தி கன்னியாகுமரியில் நவம்பல் 3 ஆம் தேதி மாலை சிறப்பு கருத்தரங்கம், நினைவுச்சுடர்கள் சங்கமம், கலைவிழா, பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பாலபிரஜாபதி அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மாநிலம் முழுவதிலிருந்தும் வரும் 700க்கு மேற்பட்ட பிரதிநிதிகள், செம்படை பேரணியில் பங்கேற்கும் ஒரு  லட்சம் தொழிலாளர்களை உபசரிக்க சிஐடியு மூத்த தலைவர் ஜி.செலஸ்டின் தலைமையில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், சிபிஎம் குமரி மாவட்ட  செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன், தலைவர் பி.சிங்காரன், அகமது உசேன், பேராசிரியர் ற்றி.நாகராஜன், எம்.சித்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள வரவேற்புக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.