நாகர்கோவில், அக். 8- கொல்லங்கோடு நக ராட்சியில் மாற்றுத்திறனாளி யான கவுன்சிலருக்கு அர சியல் காழ்ப்புணர்ச்சியுடன் இடையூறு ஏற்படுத்தி அவ மதிப்பு செய்துள்ளதாகவும், அதற்கு நகராட்சி ஆணையர் துணைபோவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே. முகமது புறோஸ்கான். இவர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். இவரது வார்டுக்கு உட்பட்ட நம்பாளி பகுதியில் தனியார் படிப்பகத்தின் சார்பில் பேருந்து கால அட்டவணையும், அவசர தொலைபேசி எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் வார்டு கவுன்சிலரான கே.முகமது பெரோஸ்கான் பெயருடன் அவரது செல் பேசி எண்ணும் இடம்பெற்றி ருந்தன. இரண்டு மாதங் களில் அவரது பெயரும் செல்பேசி எண்ணும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.பெரோ ஸ்கான் கூறுகையில், அவ சர உதவிக்கு அழைக்க வேண்டிய நபர்களின் பட்டி யலில் எனது பெயரை பொறி க்க நான் கூறவில்லை. அவர் களாக பொறித்துவிட்டு நீக்க வும் செய்துள்ளனர். எனது வார்டு என்பதால் பொறித்தது குறித்து கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால், என்னை புறக்கணிப்பது போல் உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக் காக பெயரை நீக்கியிருப் பது குறித்து நகராட்சி ஆணையிரிடம் புகார் கொடுத்துள்ளேன். என்றார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலை வர் எஸ்.சார்லஸ் கூறுகை யில், மக்கள் பிரதிநிதியாக மாற்றுத்திறனாளி ஒருவர் செயல்படுவதை சகித்துக் கொள்ளாததன் வெளிப்பாடு தான் இந்த பெயர் நீக்கம். இதை எமது அமைப்பின் சார்பில் வன்மைாக கண்டிக் கிறோம். தனிநபர் ஒரு பொது அறிவிப்பை செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர் அந்த பொறுப்பில் நீடிக்கிறபோது உள்நேக்கத்துடன் பெயரை நீக்கி அவமரியாதை செய்வ தை ஏற்க முடியாது. உட னடியாக அவரது பெயரை மீண்டும் பொறிக்க நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.