states

மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்பப் பெறுக!

சென்னை,நவ.24- மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்  எனும் அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.   இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழகத்தில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணோடு கட்டாயமாக ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலை யில் தற்போது ஆதாரை இணைக்காதவர்களின் மின்சார  கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியாது என பல இடங்களில் மறுக்கப்படுகிறது. இதனால்  தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மின்சார கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்ப தோடு, மின்சார இணைப்பு துண்டிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி உரிய தேதியில் பணம் கட்டாமல் பின்னர் அபராதக் கட்டணம் சேர்த்துக் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் உள்ளாவார்கள். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதாரை இணைக்கும் என்ற முடிவினை தமிழ்நாடு மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும்.