states

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை

சென்னை, மே 20- கொரோனா காலத்தில் பணி யாற்றிய மருத்துவர்களுக்கு அரசு  மருத்துவமனை மருத்துவர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணிராமதாஸ் விடுத் துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு 1021   மருத்துவர்களை  நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு  அக்டோ பர் 11-ஆம் நாள் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  அரசு மருத்துவர்களை  தேர்ந்தெடுக்கும் போது,  2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தது 100 நாட்கள் பணியாற்றிய  மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்று ஒன்றிய அரசு பரிந்துரைத் திருக்கும் போதிலும், அதன்படி கொரோனா காலத்தில் பணியாற்றிய   மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆள்தேர்வு அறிக் கையில் எதுவும் குறிப்பிடப்படாதது  வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா 2வது கட்டத்தில் மருத்துவப் பணியாற்றியது மிக வும் சவாலானது ஆகும். தங்களின் குடும்பத்தினரை மாதக்கணக்கில் பிரிந்திருந்து, உயிரைப் பணயம்  வைத்து பணியாற்றிய மருத்துவர்க ளின் தியாகம் போற்றப்பட வேண்டும். செவிலியர்களை பணியமர்த்தும் போது, கொரோனா காலத்தில் பணி யாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழக அரசு, மருத்து வர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காததும், அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்க மறுப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மருத்துவர்களின் சேவைகளை மதித்தும், சமூகநீதியை கருத்தில் கொண்டும் 1021 மருத்துவர்கள் நிய மனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று அந்த  அறிக்கையில் அன்புமணி வலியுறுத் தியுள்ளார்.