மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துங்கள் தேர்தல் ஆணையம் உத்தரவு
7 கட்டமாக நடைபெறும் 18-ஆவது மக் களவை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள் ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “விக்சித் பாரத்” என்ற பெயரில் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து கருத்து தெரி விக்குமாறு பிரதமர் மோடியின் படத்து டன் மக்களுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தி அனுப்பி வருகிறது. குறுஞ்செய்தி யில்,”கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அர சின் பல்வேறு திட்டங்களால் 140 கோடிக் கும் அதிகமான இந்திய குடிமக்கள் நேரடி யாகப் பயனடைந்துள்ளனர், மேலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து பயனடை வார்கள்” எனக் கூறப்படுகிறது. இது அப் பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் தன. இந்த புகாரையடுத்து “விக்சித் பாரத்” மூலம் மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என மோடி அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாயாவதிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் புடாவன் பகுதி யில் பணம் தொடர்பான பிரச் சனையில் சலூன் கடை தொழிலாளியான சஜித் கான் என்பவரின் 3 மகன்களை அருகில் குடியிருக்கும் வினோத் என்ப வர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் சஜித் கானின் 2 மகன்கள் பலியாகிய நிலையில், ஒருவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாநில பாஜக அரசின் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கினால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலை யில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரப்பிரதேச பாஜக அர சிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புடாவுனில் சகோதரர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக வும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் தேர்தல் நேரத்தில் அரசியலாக்க வேண்டாம்” என கூறியுள்ளார். அதாவது தேர்தல் நேரத்தில் இந்த சம்பவத்தை அர சியலாக்க வேண்டாம் என்று பாஜகவிற்கு ஆதரவாகவும், “இந்தியா” கூட்டணிக்கு எதிராகவும் கூறியுள்ளார். இதனால் மாயாவதிக்கு எதிராக அனைத்து தரப்பிலும் கண்டனம் கிளம்பியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான வேட் பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. தென் சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்தி யச் சென்னையில் வினோஜ் பி. செல்வம், வேலூரில் ஏ.சி. சண்முகம், கிருஷ்ணகிரியில் சி. நரசிம்மன், நீலகிரி-யில் (தனி) எல். முரு கன், கோயம்புத்தூரில் கே. அண்ணாமலை, பெரம்பலூரில் டி.ஆர். பாரிவேந்தர், திரு நெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கன்னி யாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகி யோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.