சென்னை, அக்.10- தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிக்காமல் கண்ணை மூடிக் கொண்டி ருந்தது ஏன்? என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய எடப்பாடிபழனிச் சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீண்ட கால சிறைவாசி களை விடுதலை செய்யக் கோரி கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத் தின் மீது பேசிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் விடு தலைக்கு அதிமுக அரசு போரட்டம் நடத்தியது. திமுக ஆட்சியில் தாம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார் கள்” என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்,“ இஸ்லாமிய மக்கள் மீது மிகுந்த அக்கறையுடன் எதிர்க்கட்சித் தலைவர் பேசினார். ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலத் தில் கண்ணை மூடிக்கொண் டிருந்தற்கு என்ன காரணம்? கல்லூரி மாணவிகள் பேருந்தோடு எரித்தவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடு தலை செய்தது ஏன்? இஸ்லா மிய கைதிகளை விடுவிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சரமாரியாக முதல்வர் கேள்விகளால் துளைத்து எடுத்தார். ஆனால், ஒன்றுக்கு கூட பதில் கூற முடியாமல் திக்கு முக்காடிய எடப்பாடி, பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று உண் மைக்கு மாறான காரணம் கூறி வெளிநடப்பு செய்த னர்.