states

இ-சேவை 2.0 திட்டம்: புதிதாக 194 சேவைகள்

சென்னை, மே 11-  இ-சேவை 2.0 என்ற திட்டம் மூலம் புதிதாக 194 சேவைகளை அறி முகப்படுத்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள மின் ஆளுமை முகமை முடிவு  செய்துள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது  இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ்  உள்ள 580 மையங்கள் உட்பட பல் வேறு முகமைகளின் கீழ் 10,818  இ-சேவை மையங்கள் செயல்படு கின்றன. இ-சேவை மையங்கள் மூலமாக  வருவாய்த் துறையின் கீழ் வரு மானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்  உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படு கின்றன. அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில், தமிழகத்தில் இ-சேவை 2.0 விரைவில் பயன்பாட்டு க்கு வர உள்ளதாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.  

இது தொடர்பாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ‘‘இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரை வில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு என்று தனியாக ஒரு  செயலியும் உருவாக்கப்பட்டு வரு கிறது. விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவு செய்து அதன்மூலம் பல முறை சேவைகளை பெற முடியும்.  

குறுந்தகவல் மூலம் சேவை விவரங் களை மக்கள் அறிந்துகொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார். இதன்படி மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், வருவாய் நிர்வாக துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, தீயணைப்பு துறை, அண்ணா பல் கலைக்கழகம், பொது விநியோகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கால்நடை துறை, சென்னை போக்கு வரத்து காவல், கைத்தறி துறை,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, பத்திரப் பதிவு துறை, போக்குவரத்து துறை, நீர்வளத் துறை, தொழிலாளர்கள் நல வாரியங்கள், சிவில் சப்ளை துறை,  பொதுப் பணித்துறை, பள்ளிக் கல்வி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான சேவைகள் வழங்கப்படவுள்ளன.