states

பிப். 8 ஆர்ப்பாட்டம் : திமுக பங்கேற்கிறது

சென்னை,பிப்.4- மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப். 8 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக  நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் அறி  வித்துள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அறிவுரைப்படி, மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநக ரங்களிலும் பிப்.8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக தமது கண்ட னக் குரலை எழுப்பிட வேண்டும். அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழ செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய  வேண்டுமென மாவட்டக் கழகச் செய லாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.