states

ரூ.32 லட்சம் கோடி 9 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் மீது மட்டும் மோடி அரசு வரி!

எரிபொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பொருளாதார அளவில் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில்  வேலையின்மை அதிகரித்துள்ளது.  ஒன்றிய ஆட்சியைப் பொறுத்தவரை, முந்  தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடுகை யில், தற்போதைய பாஜக அரசில் பெட்ரோல் மீதான கலால் வரி 116 சதவிகிதமும், டீசல் மீதான  கலால் வரி 357 சதவிகிதமும் அதிகமாக உள்ளது.  பெட்ரோல், டீசல் மீதான வரிகளை தொடர்ந்து உயர்த்தியதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு பொதுமக்களிடம் இருந்து  ரூ.32 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாயை  திரட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் தயாரிக்கப் பயன்படும் கச்சா  எண்ணெய் விலை 35 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை  குறைக்கப்படவில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-க்கும்  அதிகமாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90-க்கும் மேலாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், அதன் பலன்களை நாட்டு மக்களுக்கு  வழங்காமல், பெட்ரோல் - டீசல் மீது வரி விதித்து  ஒன்றிய அரசு இரக்கமே இல்லாமல் லாபம் ஈட்டு கிறது. இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சி யில் இருந்த அளவுக்கு பெட்ரோல் - டீசல் மீதான  வரி விகிதங்களை குறைத்து, அவற்றின் விலையை  லிட்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 30 குறைத்து பொதுமக்க ளின் சுமையை ஒன்றிய அரசு குறைக்க முடியும்.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெரு மளவு குறைந்துள்ளதற்கு ஏற்ப, பெட்ரோல் - டீசல் விலையை ஒன்றிய அரசு 35 சதவிகிதம் வரை குறைக்கலாம். ஆனால், எரிபொருள்கள் விலையேற்றத்தின் மூலம் மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை ஒன்றிய அரசு அவர்களி டமிருந்து கொள்ளையடித்து வருகிறது.

- ஜெய்ராம் ரமேஷ்  
காங்கிரஸ் பொதுச் செயலாளர்