states

பிரதமர் குறிப்பிடும் லட்சாதிபதி யார்?

ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் ஏழைகள் இன்று லட்சாதிபதிகள் ஆக மாறியுள்ளனர்; ஒன்றிய அரசின் உதவியுடன் அவர்கள் சொந்தமாக வீடுகளைக் கட்டி லட்சாதிபதி ஆகியுள்ளனர் என்று பிரதமர் மோடி அளந்துவிட்டுள்ளார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா இணையதளத் தகவல்கள் அடிப்படையில், 2022 அக்டோபர் 10 நிலவரப்படி தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 6.8 லட்சம் வீடுகளில் 4.7 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் 4.7 லட்சம் வீட்டில் வசிப்ப வர்கள் லட்சாதிபதிகள் என அர்த்தமாகுமா? மோடியின் கணக்குப்படி ரூ. 1லட்சம் வைத்திருந்தால் அவர்கள் லட்சாதிபதி போலும். “பிரதமர் பெயரில் வீடு கட்டும் திட்டத்துக்கு கால்வாசி நிதியைத் தான் ஒன்றிய அரசு தருகிறது. முக்கால்வாசி நிதியை மாநில அரசுதான் கொடுக்கிறது. அப்படியென்றால் இது முதலமைச்சர் வீடு கட்டும் திட்டம்தானே. அதற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியது யார்? என்ற மக்களவை உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்கு இதுவரை ஒன்றிய அரசோ, பாஜக-வோ பதில் சொல்லவில்லை.