states

போலி சான்றிதழ்களால், தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை, ஆக. 27- வேலை மற்றும் கல்விக்காக போலி சான்றிதழ்கள் தயாரிப்பவர்களால், தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது வேதனையளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. அதனால் தான், சாதி பேதமற்ற சமு தாயம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு இன்னும் கனவாக இருப்ப தில் ஆச்சரியமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. பரோடா வங்கியில் கடந்த 1989 ஆம் ஆண்டு பழங்குடியினர் பிரிவில் வரக்கூடிய காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறி அதற்கான ஒதுக் கீட்டில் 1989ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பெருமாள் சாதிச் சான்றிதழ் போலியானது என்றும், ஒட்டர் சமூ கத்தை சேர்ந்த அவர் காட்டுநாயக்கர் எனக் கூறி தாக்கல் செய்த சான்றி தழை ரத்து செய்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநிலக் குழு உத்தர விட்டது. அதனடிப்படையில் பெருமாளுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ நிஷா பானு மற்றும் என்.மாலா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு களை வழங்கியுள்ளனர்.

நீதிபதி நிஷா பானு, சான்றிதழ் சரி பார்ப்புக்கு நாடாளுமன்ற குழு நிர்ண யித்த தேதி என்பது 1995இல் இருந்து துவங்கும் நிலையில், 1989இல் பணியில் சேர்ந்த மனுதாரரின் சான்றிதழை சரி பார்த்து நிராகரித்தது தவறு எனக் கூறி, மனுதாரருக்குக் சேர வேண்டிய அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் 8 வார காலத்திற்குள் வழங்க  பரோடா வங்கிக்கு உத்தரவிட்டார். நீதிபதி மாலா, சான்றிதழ் சரி பார்ப்பிற்காக கட் ஆப் காலம் நிர்ண யித்தது அபத்தமானது என்றும், நியாய மற்றது என்றும் கூறியுள்ளார். இதை அனுமதித்தால் 1995ஆம் ஆண்டுக்கு  முன்னர் நடந்த மோசடிகளை புறக்க ணித்துவிட்டு, பின்னர் நடந்த  மோசடிகளில் மட்டும் சட்டத்திற்குட் பட்டு நடவடிக்கை எடுப்பதாகிவிடும் என தெரிவித்துள்ளார்.. மனுதாரரின் சான்றிதழை ரத்து செய்தது நியாயமானது எனக் கூறி ஓய்வு கால பயன்களை வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார். மேலும் அவரது உத்தரவில், சில  நேர்மையற்றவர்கள், வேலை மற்றும் கல்விக்காக போலிச் சான்றி தழ்கள் தயாரிப்பதாகவும், அதனால், உண்மையான தகுதியுள்ள நபர்களின் உத்தரவாத உரிமைகளைப் பறிக் கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இத னால் சாதியற்ற, வர்க்கமற்ற சமு தாயத்தின் இலக்கை அடைய வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கனவு 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கனவாகவே நீடிக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.