சென்னை, மே 20- ஒன்றிய அரசு 12 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் 20 தனி யார்த் துறை நிபுணர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாக நேரடியாக நியமிக்க முடிவு செய்திருப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக் கான இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப் படமாட்டாதாம்! இப்படி ஓர் அதிர்ச்சிக் குரிய செய்தி 19.5.2023 தேதியிட்ட ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேட் டில் வெளிவந்துள்ளது. இதைவிட அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விதிகள் மீறல் - அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு நேர் எதிரான நிலைப்பாடு, அதனை மதிக்காத அவப்போக்கு வேறொன்று இருக்க முடியுமா?.
இப்படி முக்கிய 12 துறைகளுக்கு 20 தனியார்த் துறை நிபுணர்களை நேரடியாக உயர் பொறுப்புகளில் நிய மிப்பது எந்த விதியின்கீழ் நடைபெறு கிறது? எதேச்சதிகார நடவடிக்கை ஒன்றிய அரசின் பதவிகளானாலும், மாநில அரசுகளின் பதவிகள் - பணி கள் ஆனாலும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அல்லது மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன்மூலமே நடைபெற வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் (Articles) 315 முதல் 323 வரை உள்ளனவே - அவற்றின்படி இந்த நியம னங்கள் சட்ட விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகள் ஆகாதா? இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஒன்றிய அரசானாலும், மாநில அரசா னாலும் வேலை - பணிகளுக்கான நியமனங்களை - சமூகநீதி அடிப் படையில் அவரவர்களுக்கு அரசு ஆணைகள்படி ஒதுக்கப்பட்டு, விகிதாச்சாரத்தின்படி - முறைப்படி தேர்வு, நேர்காணல் இவை நடத்தித் தானே நியமிக்க முடியும்? ஒன்றிய அரசு போன்றவற்றில் உள்ள பணிமனைகளை முக்கியப் பணிகளை காவி மயமாக்கிட (Saffronisation of Public Services) இது ஒரு வகையான தந்திர வியூகம் அல்லாது வேறு என்ன? லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இப்படிப்பட்ட திடீர் உத்தி யோக ‘இடைச்செருகல்கள்’மூலம் பறிக்கப்படுவது கொடுமையல்லவா? இதுபற்றி மாநில அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டனக் குரலை எழுப்பி, இம்முடிவுகளைத் திரும்பப் பெற வைக்கவேண்டும் என்று வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.