states

டாக்டர் அம்பேத்கர் கல்வி-வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பயிற்சி ஆரம்பம்

சென்னை, நவ. 14- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 முதல் நிலை தேர்வில் தகுதி யானவர்கள் பட்டியலை கடந்த 8ஆம் தேதி வெளியிட்டுள்ளது. பத்து லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதி யதில் முதல் நிலைத் தேர்வில் 58,081 பேர்  தற்காலிகமாக தேர்வு  செய்யப் பட்டனர். இதுகுறித்து கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் கூறியிருப்பதாவது:- டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற கே.வெங்கடேசன், எஸ்.அமலசுகன்யா, பி.கலைச் செல்வி, இ.உதித், சி.ஹானஸ்ட் ராஜ், ஆர்.ஷியாமளா தேவி (செங்கல் பட்டு), ஆர்.தீபக், வி.சவுந்தரராஜன் (புதுக்கோட்டை). சக்தி முருகன், டி.அனிதா, எம்.சீதா, எம்.மோகனப்பிரியா, பி.சுகன்யா, ஆர்.அங்கமுத்து (காஞ்சி புரம்), கலைச்செல்வி (திருச்சி), அ.ஹசீனா பர்வீன், எம்.முனிவேலு, கிருஷ்ணகுமார், எம்.பிரதீப் (சேலம்), சஞ்சீவி (பள்ளிப்பட்டு), சௌமியன் ராகுல் (மதுராந்தகம்), எம்.உமா, மஞ்சுளா (ராமநாதபுரம்), பி.ஹரி (சோளிங்கர்), எம்.நிவேதிதா. முன்னாள் மாணவர்கள், டி.பாலாஜி (பெருங்களத்தூர்), மோகன், எம்.புவனா (பழவேற்காடு), அருண் (மதுரை), ஜி.பிரகாஷ், ராஜா  நாகராஜன், துர்கா, கோப்பெருந் தேவி, மோனிஷா, மகாலட்சுமி, சுரேந்தர் (செங்கல்பட்டு) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

இந்த மாணவர்களின் வெற்றிக்கு உதவிய ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களை பாராட்டுகிறோம். மேலும் வெற்றிக்கு தேவையான ஆலோச னைகளை வழங்கி வழிக்காட்டிய முது நிலை தணிக்கையாளர் ஜவஹர், எம்.வி.கிருஷ்ணன் ஆகியோரின் பேணி யும் பாராட்டுக்குரியது. கல்வி மையத் தின் வெற்றிக்கு மாணவர்களின் அளப் பரிய பங்களிப்பும் ஒருங்கிணைந்த முயற்சியுமே காரணம். பயிற்சி குறித்த செய்தியைப் பரவ லாக கொண்டுச் சேர்த்து, ஏழ்மையில் இருந்தும், ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலைப் பெறப் போராடிக் கொண்டிருக்கும் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பயன் அடைந்ததில் காட்சி மற்றும் அச்சு ஊடகத்தின் பங் களிப்பு அளப்பரியது.  இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றி பெறுவதற்கு நிதி உதவியை தொடர்ந்து வழங்கிய நன்கொடை யாளர்கள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் பாராட்டுத் தெரிவித்துக்கொள் கிறோம். புதிதாக தேர்வான குரூப் 2 வெற்றி யாளர்களுடன் புதிதாக சேரும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு பிரதான முதன்மைத் தேர்வி ற்கு விரைவில் மாதிரித் தேர்வுகளும் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.