states

மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம், உதவித் தொகை இரு மடங்காக அதிகரிப்பு

சென்னை, ஜூலை 24- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் செயல்படுத்  தப்படும் விபத்து நிவாரணம், மருத்து வம், மாற்றுத்திறனாளிகளுடைய குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ஆகியவற்றை இரு மடங்காக  உயர்த்தி வெளியிடப்பட்ட தமிழ்நாடு  அரசின் அரசாணையை, தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாற்  றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலை வர் தோ.வில்சன், பொதுச்செயலா ளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையின் மூலம்  விபத்துகளில் மரணமடையும் அல்லது  முழுமையாக செயல் இழக்கும் மாற்  றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு லட்ச ரூபாய்  நிவாரணத் தொகை ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்படுகிறது. நிரந்தரக் குறைபாடு தவிர்த்து மருத்து வச் செலவுகளுக்காக வழங்கப்பட்டு வரும் ரூ.25,000 தொகை ரூ.50,000 ஆயி ரமாக உயர்த்தப்படுகிறது. இதே போல  மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் நல்ல நிலையில் இருந்தாலும், அவர் கள் கல்வி பயில வழங்கப்பட்டு வரும்  ஆண்டு உதவித்தொகைகளும் தற்போது வழங்கப்படுவதைவிட இரு மடங்காக வழங்கப்படும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  அதேநேரம், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 3 கோடி அளவில் மட்டுமே நிதி ஒதுக்கப்  படுகிறது.  இதிலும் 25 சதவீதம் நிர்வாக  செலவுகளுக்காக எடுத்துக்கொண் டது போக மிக சொற்ப தொகையே  நலவாரியத்தின் மூலம் குறிப்பிட்ட  நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் நிலையில், சில நூறு மாற்றுத்திறனாளி கள் மட்டுமே நலவாரியத்தின் மூலம் பயன்பெற முடிகிறது. மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் நலவாரிய பயன்களை பெற விண்ணப்பித்தும் கிடைப்பதில்லை. இதனால் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிய கவனம் செலுத்த  வேண்டுமென கேட்டுக்கொள்கி றோம்” எனவும் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.