பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் டிஸ்னி தனது நிறுவன ஊழியர்களை மூன்று சுற்றுகளாக பணியில் இருந்து வெளியேற்றப் படுவதாக அறிவித்த நிலையில், முதல் சுற்றில் மெட்டாவேர்ஸ் பிரிவை மூடி அதில் பணியாற்றும் 50 மிக மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள ஊழியர்களை நீக்கி யுள்ளது.
நாக்பூரில் உள்ள மகா ராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவி ஸின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் 30 வயது மிக்க இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீ சார் விசாரணையில் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியா வுக்கான எண்ணெய் சப்ளை 22 மடங்கு அதி கரித்துள்ளதாகவும், அதிகபட்சமாக கடந்த பிப்ரவரியில் ஒரு நாளை க்கு 16 லட்சம் பீப்பாய் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வும் ரஷ்ய துணைப் பிரத மர் அலெக்சாண்டர் நோவக் தகவல் தெரி வித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள பக்கேன்வாலா கிராமத்தில் 3 கிமீ பரப் பளவில் புரட்டியெடுத்த சூறாவளி காற்றால் 70 வீடுகள், 130 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், 8 பேர் மருத்து வமனையில் காயம டைந்தனர்.
நாட்டின் 20 மாநிலங் களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங் களில் மருந்துக்கட்டுப் பாட்டு இயக்குநரக அதி காரிகள் சோதனை நட த்திய நிலையில், தரம் குறைந்த மருந்துகளை தயாரித்ததாக 18 நிறு வனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
தங்கள் நாட்டின் பாதுகாப்பையும், பிராந்தியத்தின் அமைதியை யும் கணக்கில் கொண்டே அணுஆயுதங்களை விரிவுபடுத்தும் கொள்கையை வகுத்திருக்கிறோம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ஒருவேளை அணுஆயுதத் தாக்குதல் தங்கள் மீது நடந்தால், எப்படி அதை எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சியை அண்மையில் வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ரஷ்யா, ஈரான், துருக்கி(துர்க்கியே) மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ளார்கள். இந்த நான்கு நாடுகளின் துணை அமைச்சர்களும் பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பார்கள். அதில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பது குறித்து நான்கு நாடுகளும் பேசவிருக்கின்றன. எந்தத் தேதியில் சந்திப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் மிக்கைல் போக்டனோவ் தெரிவித்திருக்கிறார்.
நீதித்துறையை சீர்குலைக்கும் வகையிலான இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் நடத்தியிருக்கிறார்கள். பொதுப் போக்கு வரத்து, பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நல மையங்கள் ஆகிய வற்றைத் தவிர அனைத்துத் துறைகளிலும் வேலை நிறுத்தம் நடத்தப் பட்டது. மக்களின் கோபத்தைக் கண்ட பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையிலான அரசு தனது நடவடிக்கையை நிறுத்தி வைப்ப தாக அறிவித்திருக்கிறது.