நாகைமாலி: நீண்ட நாள் கோரிக்கையான மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்ற வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீதான தமிழக அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த 1976 மற்றும் 1973 போன்றதொரு ஒழுங்காற்றுச் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் 199 கல்லூரிகளில் உள்ள சுயநிதி பிரிவுகளில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு வழங்காமல் உள்ள கல்விக் கட்டண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தவர்கள் - ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே சென்றுள்ளனர். ஏராளமான பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல தரப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக பகுதிநேர ஆசிரியர்களாகவே இருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை களையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தகுதி தேர்வில் விலக்கு...
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல் ஆசிரியர்களாக பணியாற்றுகிறவர்களுக்கு இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் சம்பள உயர்வு தர முடியும் என கல்வித்துறை அறிவித்து விட்டதால் சம்பள உயர்வு இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு இந்த தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் இவர்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்க வேண்டும். ஒட்டுமொத்தமான ஆசிரியர் பிரச்சனைகளை ஆய்வு செய்து அவைகளை தீர்த்து வைப்பதற்காக தனியாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரி களைக் கொண்ட ஒரு குழு இதற்காக நியமிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகை களை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்க ளுக்கும் வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் தொல்லைக்கு முடிவு கட்டுக!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடக்கும் மாணவி கள் மீதான பாலியல் தொல்லைக்கு இந்த அரசு முடிவு கட்ட வேண்டும். போக்சோ சட்டம் கறாராக அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் நன்கொடை, அதீத கட்டண உயர்வுகளை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் இல்லாத இடங்களை ஆய்வு செய்து அவைகளை கட்டிக் கொடுக்க வேண்டுகிறேன். எனது கீழ்வேளூர் தொகுதியில் கூட அலுவலகங்கள் இல்லை. சென்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசுப்பள்ளிகள் இனி வறுமையில் இருக்காது; அவைகள் பெருமைப்படக் கூடிய வகையில் இருக்கும் என்ற நமது பள்ளிக் கல்வி அமைச்சர் இங்கே கூறியதை நான் நினைவுபடுத்த விரும்பு கிறேன். அந்த வழியில் இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளி கள் பெருமைப்படத் தக்க வகையில் செயல்படும் என்ற நம்பிக்கையோடு எனது உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு மாலி பேசினார்.