திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில், திருப்பதியில் ஹெலிகாப்படர் “ஜாய் ரைடு” சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஏரோடான் என்ற நிறு வனம் இந்த சேவையை விரைவில் அறி முகப்படுத்தவுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் சென்ற டிராக்டர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
40 நாட்கள் அவகாசத்தில் மராத்தா சமூகத்தின ருக்கு இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு தவறினால், அக்டோபர் 25 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, மராத்தா சமூகத்தினரை அணிதிரட்டி வரும் மனோஜ் ஜாரங்கே ஞாயிறன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஜல்னா மாவட்டத்தில் மனோஜ் ஜாரங்கே உண்ணாவிரதம் இருந்த பொழுது பாஜக கூட்டணி அரசு மராத்தா இட ஒதுக்கீட்டை 40 நாள் அவகாசம் அளித்தது. இத னால் மனோஜ் ஜாரங்கே உண்ணாவிரதத்தை கைவிட்டார். 40 நாள் அவகாசம் அக்., 24 அன்று நிறைவடைகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் தலைநகர் தில்லி யின் ஒட்டுமொத்த காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் 306 புள்ளிகளாக அதிக ரித்துள்ளது என காற்று தரக் குறியீடு ஆய்வு நிறு வனம் தகவல் தெரிவித்துள்ளது. இதே போல உத்த ரப்பிரதேச மாநிலம் நொய்டா (308), ஹரியானா மாநிலம் குர்கான் (283) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாகியுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான 83 பேர் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டி யலை பாஜக சனியன்று வெளியிட்டது. இந்த 2-ஆவது பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே ஆதரவாளர்கள் ஜெய்ப்பூர், சித்தோர்கர், ராஜ்சமந்த், பூண்டி, ஆல்வார் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான “லியோ” திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 3 நாட்களில் அப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது. மலையாளம், கன்னட திரை யுலகை விட தெலுங்கில் விஜய் படத்திற்கு மவுசு குறைவு என்ற நிலையில், தெலுங்கு திரையுல கில் 3 நாட்களில் “லியோ” திரைப்படம் ரூ.33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.