தேசிய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு
புதுதில்லி, ஜன.8- இந்தியப் பொருளா தாரம் நடப்பு நிதியாண்டில், 2022 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில் 7 சதவிகிதமாக குறையும் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2021-22 நிதி யாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவிகிதமாக இருந்ததாக ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 7 சதவிகிதமாக இருக்கும் என்று, தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியா னது, டிசம்பர் மாத தொடக் கத்தில் நடைபெற்ற தனது இருமாதங்களுக்கு இடையி லான நாணய கொள்கைக் குழு கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான உண்மை யான ஜிடிபி (GDP) வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. தொடர்ந்து நிலவும் சர்வ தேச பிரச்சனைகள் மற்றும் உலகளாவிய நிதி நிலைமை யின் மோசமான நிலை கார ணமாக இந்த முடிவுக்கு வந் திருந்தது. குறிப்பாக, மூன்றா வது காலாண்டில் 4.4 சதவிகி தமாகவும், நான்காவது காலாண்டில் 4.2 சதவிகித மாகவும் வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது. இதேபோல சர்வதேச நாணய நிதியமும் (IMF) 2022-23-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிக் கணிப்பை முத லில் 7.4 சதவிகிதமாகவும், பின்னர் 6.8 சதவிகிதமாகவும் குறைத்திருந்தது. இந்நிலையில்தான், தேசிய புள்ளியியல் அலுவல கம் (NSO) வெள்ளிக்கிழமை வெளியிட்ட முதல் முன்கூட் டிய கணிப்பில் 2022-23ஆம் நிதியாண்டில் இந்திய பொரு ளாதாரம் 7.0 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவித் துள்ளது. இது ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதி யத்தின் கணிப்பைக் காட்டி லும் சற்று அதிகம் என்றா லும், 2021-22 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 1.7 சதவிகி தம் குறைவாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7 சதவிகிதம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந் தது குறிப்பிடத்தக்கது. எனவே, 2021-22 நிதி யாண்டைக் காட்டிலும், 2022 -23 நிதியாண்டிற்கான என்எஸ்ஓ-வின் வளர்ச்சி குறித்த கணிப்பு குறைவாக அமைந்துள்ளது.
2020-21 நிதியாண்டில் 98 ஆயிரத்து 629 கோடி ரூபாயா கவும். 2021-22 ஆம் நிதி யாண்டில் 1 லட்சத்து 5 ஆயி ரத்து 955 கோடி ரூபாயாக வும் இருந்த தனிநபர் மொத்த தேசிய வருமானம் 2022-23 நிதியாண்டில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 807 கோடி ரூபா யாக இருக்கும். 2022 நிதி யாண்டில் நாட்டின் விவசா யத் துறை உற்பத்தி 3 சத விகிதம் வளர்ச்சியடைந்த நிலையில், 2023-ஆம் நிதி யாண்டில் 3.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும். சேவைத் துறை வர்த்தகம், ஹோட்டல் கள், போக்குவரத்து, தக வல் தொடர்பு மற்றும் ஒளி பரப்புத் தொடர்பான சேவை கள் 2022 ஆம் நிதியாண்டில் 11 சதவிகிதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2023 நிதியாண்டில் 13.7 சதவிகிதம் வளர்ச்சி அடையும். நிதி, ரியல் எஸ் டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 2022-ஆம் நிதி யாண்டில் 4.2 சதவிகிதமாக இருந்த நிலையில் 2023-ஆம் நிதியாண்டில் 6.4 சதவிகித மாக வளர்ச்சி அடையும். அதேநேரம் சுரங்கம் மற் றும் குவாரிகள் பிரிவு 2022- ஆம் நிதியாண்டில் சுமார் 11.5 சதவிகிதம் வளர்ச்சி யடைந்த நிலையில் 2023 நிதி யாண்டில் அவற்றின் வளர்ச்சி 2.4 சதவிகிதமாக மட்டுமே இருக்கும். 2022- ஆம் நிதியாண்டில் உற்பத்தி துறை வளர்ச்சி 9.9 சதவிகித மாக இருந்த நிலையில் 2023- ஆம் நிதியாண்டில் அது 1.6 சதவிகிதம் என்ற அள விற்கே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல கட்டுமானத் துறை வளர்ச்சியும் 2022-இல் 11.5 சதவிகிதத்திலிருந்து 2023-இல் 9 சதவிகிதமாகக் குறையும் என கணிக்கப் பட்டு உள்ளது.