திண்டுக்கல், மார்ச் 9- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி பழனி யில் பக்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான பாதை யான கிரிவலப் பாதையை தேவஸ்தான நிர்வாகம் முடக்கு வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஒரு தனி நபர் போட்ட வழக்கில் பழனி மலை கிரிவலப் பாதையை முடக்கும் வேலையை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கிரிவலப் பாதை பழனி மலைக் கோவி லுக்கு செல்லும் பாதை மட்டு மல்ல ஏறக்குறைய 3 கி.மீ சுற்ற ளவு கொண்ட கிரிவலப் பாதை மலையைச் சுற்றியுள்ள விவ சாய நிலங்களுக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக ளுக்கும், மடங்களுக்கும், கடை களுக்கும், பழனி மக்கள் சென்று வரக்கூடிய மிக முக்கியமான பாதையாகும். ஏற்கனவே கோவிலின் இருபுறமும் தடையரண்களை அமைத்து பக்தர்களின் நட மாட்டத்திற்கும், சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைக் காரர்களுக்கும் பெரும் சிர மத்தை, இடையூறுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒரு தனி நபர் தாக்கல் செய்த வழக்கை யொட்டி மதுரை உயர்நீதிமன்ற கிளை கொடுத்த உத்தரவைக் காரணம் காட்டி கிரிவலப் பாதையை முடக்க கோவில் நிர்வாகம் முயற்சிக்கிறது. கிரி வீதியில் பழனி அடிவாரம் மற்றும் நகருடன் இணைக்கும் சன்னதி ரோடு, ஆண்டவன் பூங்கா ரோடு, கொடைக்கானல் ரோடு, அருள்ஜோதி வீதி ஆகிய சாலைகளை இரும்பு தடுப்பு களை கொண்டு அடைத்து வருகின்றனர். ஒரு ஆள் மட்டுமே உள்ளே நுழையும் அளவிற்கு இடை வெளி விட்டிருப்பது பழனிக்கு வரும் பக்தர்களையும், பழனி மக்களையும், அவமானப் படுத்துவதாக உள்ளது.
வரு டத்தில் சித்திரை மாத கடைசி 7 நாட்களிலும் வைகாசி மாத முதல் 7 நாட்களில் மட்டும் பக் தர்கள் கிரி வலம் வருவார்கள். மற்ற நாட்களில் பக்தர்கள் கிரி வலத்தை முழுவதுமாக பயன் படுத்துவது கிடையாது. கிரி வீதியின் குடமுழுக்கு நினைவு அரங்கத்திலிருந்து பாதவிநாய கர் கோவில் வரை மட்டுமே பொதுவாக திருவிழாக்காலங்க ளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி இருக்கும். பொது போக்குவரத்து மற்றும் பழனி வாழ் மக்களின் பொது பயன்பாட்டில் இருந்து வரும் கிரிவலப் பாதையை எவ்வித காரணமும் முன்னறி விப்புமின்றி உண்மை நிலை யை ஆராயாமலும், முடக்கு வது சரியல்ல. இது பழனி மலைக்கு எல்லா இணைப்பு பாதை வழியாகவும் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் செயல் ஆகும். பழனி மலையும், அடிவாரமும் பழனி நகருக்குள் அமைந்துள்ளது. பழனி நகரையும், பழனி மலை யையும் பிரித்து பார்க்க முடி யாது. அவ்வாறு பிரிப்பது என்பது பழனி மலைக்கான புகழையும் குறைத்துவிடும், பழனி மலையை நம்பி வாழும் பழனி பகுதி மக்களின் வாழ்வாதா ரத்தை சீரழித்துவிடும். ஆகை யால் உயர்நீதிமன்றத்தில் உண்மை நிலையைத் தெரி விக்காமல் நீதிமன்றத்தின் பெய ரால் கிரிவீதியை முற்றிலுமாக முடக்கும் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.