நாடாளுமன்ற மக்களவைக் குள் வண்ணங்களைக் கக்கும் புகைக்குண்டுகளை வீசியதாக சாகர் சர்மா, மனோரஞ்சன் டி ஆகியோ ரும், நாடாளுமன்ற வளாகத்தில் புகைக்குண்டுகளை வீசியதாக அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் ஆண்கள். நீலம் ஆசாத் மட்டும் பெண் ஆவார்.
மனோரஞ்சன் டி
இந்நிலையில், இந்த நால்வரைப் பற்றிய விவரங்கள் வெளியாகியுள் ளன. அதன்படி மனோரஞ்சன் டி (33), கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆவார். திருமணமாகாதவர். ஐ.டி. நிறு வனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தற்போது தனது தந்தைக்கு உதவி யாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள் ளார். தீவிர புத்தக வாசிப்புப் பழக்கம் கொண்டவரான மனோரஞ்சன், குறிப்பாக சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர், மாணவர் தலைவராக விளங்கியவர். சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர் என்று அவரது தந்தை தேவராஜ் தெரிவித்துள்ளார்.
சாகர் சர்மா
உ.பி. மாநிலம் உன்னாவ் பகுதி யைச் சேர்ந்தவரான சாகர் சர்மா (25), தனது தாயார், சகோதரர், சகோதரி யுடன் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. தலைநகர் லக்னோவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் பெங்களூருவில் பணிபுரிந்தவர் என்றாலும், கடந்த 2 மாதங்களாக லக்னோவில் தனி யார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகவும், தனியாக இ-ரிக்சாவும் ஓட்டி வந்துள்ளார். பகத்சிங் சிந்தனை களால் ஈர்க்கப்பட்டவர் என்று அவரது நண்பர் விவேக் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அமோல் ஷிண்டே
மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டம் ஜாரி கிராமத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (25) ராணுவத்தில் சேருவதற்கு முயற்சித்து வந்தவர், ரத்னகிரி, அவுரங்காபாத், நாசிக்-கில் நடைபெற்ற ஆட்சேர்ப்பில் கலந்து கொண்டவர். எனினும், அக்னிவீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்குக் கூட முடியாத அளவிற்கு ‘வயதாகி’ விட்ட தால் விரக்தியில் இருந்து வந்தவர் என்று அவரது தந்தை தன்ராஜ் கூறியுள்ளார்.
நீலம் தேவி ஆசாத்
எம்.ஏ., எம்.எட்., எம்.பில். பட்டங்க ளைப் பெற்ற பெண்ணான நீலம் தேவி ஆசாத்தைப் பொறுத்தவரை (37), தில்லியில் விடுதியில் தங்கியி ருந்தபடி, பட்டதாரி ஆசிரியர் பணி மற்றும் குடிமைப் பணிக்கான தேர்வு களை எழுதி வந்தவர் என்றும் கூறப்படு கிறது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட நீலம் ஆசாத், 2020-21-இல் விவசாயிகள் நடத்திய வேளாண் சட்ட எதிர்ப்புப் போ ராட்டத்திலும், மல்யுத்த வீரர்களின் போராட்டத்திலும் பங்கேற்றவர் என்றும், மல்யுத்த வீராங்கனைக ளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒரு முறை கைது நடவடிக்கைக்கும் ஆளா கியிருக்கிறார் என்பதும் தெரியவந்துள் ளது. கும்ஹர் சமூகத்தைச் சேர்ந்தவரான நீலம் ஆசாத்தின் தந்தை மிட்டாய் வியாபாரி ஆவார். சகோதரர்கள் கிராமத்தில் பால் விற்கிறார்கள்.