states

வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி பிப்.13ல் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.29- வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி பிப்ரவரி 13 அன்று தமிழ்நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி,மாவட்ட ஆட்சியர் களிடம் மனு அளிக்க உள்ளனர்.  தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் மதுரையில் எஸ். சந்தியாகு தலைமையில்  நடை பெற்றது.சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். தெய்வராஜ், சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில  கன்வீனர் பி. கருப்பையன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் சாலையோர வியாபாரிகளுக் கான வெண்டிங் கமிட்டி தேர்தல் நடத் திட வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெண்டிங் கமிட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி, அனைத்து சாலையோர வியா பாரிகளையும் விடுபடாமல் கணக் கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளை முழு மையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிய பின்னரே வெண்டிங் கமிட்டிக்கான தேர்தலை நடத்திட வேண்டும். தேர்தல் நேர்மையாகவும் அனைவரும் பங்கேற்கும்படி ஜன நாயக பூர்வமாகவும் நடத்த வேண்டும். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கள் மூலம் சாலையோர வியாபாரிக ளுக்கு வழங்கப்படும் இலவச  தள்ளுவண்டிகளை முறையாக வழங் காமல், கையூட்டு பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இப்போக் கினை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை கைவிட்டு வெண்டிங் கமிட்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து உண்மையான சாலையோர வியா பாரிகளுக்கு முறையாக வழங்க  வேண்டும். மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி 13 அன்று  தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.