states

வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மே 6 தூத்துக்குடி மாவட்டத்தில் 103 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளியன்று தொடங்கியது. 23 ஆயிரத்து 999 பேர் தேர்வு எழுதுகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளியன்று தொடங்கியது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 55 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 214 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டடத்தில் 5 ஆயிரத்து 730 பேரும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று பிளஸ்-1 தேர்வு 9ஆம் தேதி தொடங்குகிறது.