states

img

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்த வேண்டும்

விழுப்புரம்,நவ.1- கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.12 கூலி நிர்ணக்க வேண்டும் என்று தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு நவ.1 அன்று விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன் தலைமையில்  நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன் வரவேற்றார். அகில இந்திய கரும்பு விவசாயி கள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் டி.ரவீந்திரன் துவக்கி வைத்து  பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றி னார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  என். சுப்பிரமணியன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.   முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, கர்நாடகா கறிக்கோழி வளர்ப்பு சங்கத்  தலைவர் ஸ்ரீதர் ரெட்டி  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 15 மாவட்டங்களில் இருந்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.  

வட்டிக்கு கடன் வாங்கி பண்ணை அமைத்து, கறிக்கோழியை வளர்ப்பு  நிறுவனங்களுக்கு தரும் விவசாயி களுக்கு வளர்ப்பு கூலி கட்டுபடியாக வில்லை என்பதால், பாதுகாத்த கறிக் கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச வளர்ப்புக்கூலியாக நிறு வனங்கள்  ரூ.12 வழங்க வேண்டும்  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையிலும், நிறுவனங்களையும் பாதிக்காத வகையிலும் கறிக்கோழி வளர்ப்புக்கான ஒப்பந்த சரத்துக்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.  கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.  பண்ணைகளுக்கு மானிய விலை யில் மின்சாரம் வழங்க வேண்டும்.  விவசாயிகளுக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் தேவையான வங்கிக் கடன் வழங்க வேண்டும்.அரசு  மானியங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கறிக்கோழி வளர்ப்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக ஏழுமலை, பொதுச் செயலாளராக கே.பி.பெருமாள், பொருளாளராக ஆர்.செந்தில்குமார், துணைத் தலை வர்களாக வேலூர் கே. சாமிநாதன், கிருஷ்ணகிரி எம்.எம்.ராஜீ, இணைச் செயலாளர்களாக தருமபுரி ஏ.ஜீவா, விழுப்புரம்  எஸ்.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.