states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டில் அதிகபட்சமாக தில்லியில் கடந்த ஆண்டு ஓராண்டு மட்டும் 5,652 சாலை  விபத்துகள் நடந்துள்ளன. தில்லியை தொடர்ந்து  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் (4,680),  ஜபல்பூர் (4,046), பெங்களூரு (3,822), தமிழ்நாடு தலைநகர் சென்னை (3,452) ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே  சகினாகா அருகே போலி “பெவி க்விக்”  (Fevi Kwik  - கடினமான பசை) தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் ரூ.10.29 லட்சம் மதிப்புள்ள  பொருட்களும், 2 இயந்திரங்கள் பறிமுதல் செய் யப்பட்டன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிங்க சந்திரா என்ற பகுதியில் கடந்த 4 நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை புதனன்று வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

கனரா வங்கியில் கடன் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான 17 பங்களாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் லண்டன், துபாயில் உள்ள சொத்துகள் என ரூ.538 கோடி மதிப்பி லான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி யது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செப்.1 அன்று நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது அல்ல; அவை கட்சிகளுக்கான நிதியை வங்கிகள் வாயிலாக சுத்தமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றி பழக்கப்பட்ட ஐடி ஊழி யர்களால், அதன் பிறகு அலுவலகத்துக்கு திரும்ப முடியாத சூழல் உள்ள நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணியாளர் மற்றும் அலு வலர்கள் மாதத்தில் 10 நாட்களேனும் அலுவலகம் வந்து செல்லுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல்  அதிகமாக தாக்குவதாக  வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆய்வில் தெரி வித்துள்ளது.