புதுதில்லி/பெங்களூரு, மே 26- கர்நாடக மாநிலத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் காவிமய மாக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் நாவலாசிரி யரான தேவனூர் மகாதேவா, இடதுசாரி எழுத்தாளர் ஜி.ராம கிருஷ்ணா ஆகியோர் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தற்போது இடம்பெற்றிருக்கும் தங்களு டைய பாடங்களை நீக்கிவிடுமாறு கோரியிருக்கிறார்கள். ஸ்ரீநாராயணகுரு, தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் மற்றும் பல்வேறு முற்போக்கு எழுத்தாளர்களின் பாடங்களை நீக்கியிருப்பதுடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அமைத்த கேசவ் பலிராம் ஹெட்கே வார் பேசிய பேச்சு பாடப்புத்தகங் களில் சேர்க்கப்பட்டிருப்பதையும் கண்டித்து இவ்வாறு அவர்கள் கோரியிருக்கிறார்கள். இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்திருப்பது, “கல்வியை அழித்துவிடும்” என்று கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப் பினர் ஒருவரே கூறியிருக்கிறார். பத்தாம் வகுப்பு பாடப் புத்த கத்தில் ஹெட்கேவார், “யார் ‘ரோல் மாடலாக இருக்க முடியும்?” என்று ஆற்றிய உரை இடம்பெற்று ள்ளது. இதே புத்தகத்தில்தான் மகாதேவா மற்றும் ஜி.ராம கிருஷ்ணா ஆகியோரின் பாடங் களும் இடம்பெற்றுள்ளன. இத னால்தான் கொதித்துப்போய் மகா தேவாவும், ஜி.ராமகிருஷ்ணாவும் இவ்வாறு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எல்.பசவராஜு, ஏ.என்.மூர்த்தி ராவ், (கொல்லப்பட்ட இதழாளர் கௌரி லங்கேஷின் தந்தையான) பி.லங்கேஷ், சரா அபுபக்கர் ஆகி யோரின் பாடங்களை நீக்கியிருப்ப வர்களுக்கு கன்னட மொழியைப் பற்றியோ, கன்னடக் கலாச்சாரத் தைப்பற்றியோ எந்தவித அறிவும் கிடையாது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜி.ராமகிருஷ்ணா தன்னு டைய அறிக்கையில், “இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங் களைச் செய்திருப்பது, சிறு குழந்தைகளின் மனதில் பாடப் புத்தகங்கள் மூலமாக விஷத்தை விதைத்திடும் வேலையாகும்” என்றும், “கல்வியின் மூலம் அர சியல் விளையாட்டை மேற்கொள் வது மன்னிக்க முடியாததாகும்” என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்திருப்பதை பாஜக சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் என்பவரும் கண்டித்திருக்கிறார். “இது ஒரு மிகவும் ஆபத்தான விஷயமாகும். நான் ஆரம்பக் கல்வி அமைச்சராக இருந்திருக் கிறேன். இவ்வாறு பாடப்புத்தக ங்ளை மாற்றியிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மன வேதனையைத் தருகிறது. அர சியல் போராட்டங்களுக்கான ஒன்றாக பாடப்புத்தகங்களைக் கருதக்கூடாது,” என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார். “ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பாடப்புத்தகங் களைத் திருத்தக்கூடாது. இன்றைய தினம் கல்வி அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி யையும் கலாச்சாரத்தையும் அழிப்பதென்பது நாட்டையே அழிப்பதற்குச் சமமானதாகும்,” என்று விஸ்வநாத் கூறியிருக் கிறார். “இவ்வாறு பாடப்புத்தகங் களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் நபரான ரோகித் சக்ர தீர்த்தா யார்? அவர் ஒரு பேரா சிரியரா? இல்லை. அவர் ஒரு சங் பரிவாரத்தைச் சேர்ந்த நபர் என்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது” என்று விஸ்வநாத் மேலும் கூறியிருக்கிறார். (ந.நி.)