தூத்துக்குடி மேல ஆத்தூர் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், நமது மாவட்டத்தில் சாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல்கலாம் போன்ற அறி வியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்குநேரியில் ஒரு தர்மசங்கடமான செயல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி யிருக்கிறார். நமது தெருக்களுக்கு சாதி பெயர் களை நீக்கிவிட்டு சுதந்திரப்போராட்ட வீரர்களின் பெயரை சூட்டினால் தமிழ் நாட்டிற்கே மேலஆத்தூர் ஊராட்சி முன்னு தாரணமாக திகழும் என்றார். இதைத் தொடர்ந்து, தெற்கு ஆத்தூர் நாடார் தெரு காமராஜர் தெருவாகவும், பம்பையாநகர் காமராஜர் தெற்கு தெரு வாகவும், தெற்கு ஆத்தூர் தேவர் தெரு பசும்பொன் தெருவாகவும், சேனையர் தெரு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவாகவும், யாதவர் தெரு சடைச்சி அம்மன் கோவில் தெருவாகவும், பரதர் தெரு கொறுவநல்லூர் கித்தேரி யம்மன் கோவில் தெருவாகவும், கொறுவ நல்லூர் நாடார் தெரு காமராஜர் நகராக வும், கொறுவநல்லூர் எஸ்.சி. தெரு டாக்டர் அம்பேத்கார் நகராகவும், கொறுவ நல்லூர் தேவர் தெரு நேதாஜி நகராக வும் மாற்றம் செய்து கிராம சபை கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பெயர்கள் உடனடியாக அமல் படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.