states

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருவில்லிபுத்தூர். மே 9-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜோதி. இவர் வீட்டில் இருந்த போது சின்ன கனி நாடார் தெருவை சேர்ந்த கவிதா மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஜோதியின் வீட்டிற்குள் நுழைந்து ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.