states

தீக்கதிர் விரைவு செய்திகள்

 தினசரி மின்  தேவை   2,000 மெகாவாட் குறைந்தது

சென்னை,நவ.15- வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரம் மெகா வாட்டாகவும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கும். கடந்த மாதம் தினசரி மின்தேவை சராசரியாக 14,500 மெகாவாட் என்ற அளவில்  இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு ஏராளமானோர் ஊருக்குச் சென்றனர். தொடர் விடுமுறை  காரணமாக பெரும்பாலான தொழிற்சாலை கள், அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்க வில்லை. மேலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ளது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடும் குறைந்துள்ளது. இந்நிலையில், தினசரி மின்தேவை 11,200 முதல் 11,600 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்

சென்னை,நவ.15- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் கள் நல வாரியத்தின் 10,000 கட்டுமான தொழி லாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று(நவ.15) தொடங்கி வைத்தார். நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர் களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் தொழி லாளர்களுக்கு ரூ.400 கோடி மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடிக்கான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கி டும் அடையாளமாக 5 கட்டுமான தொழிலா ளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை, நவ.15 தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது. செவ்வாயன்று (நவ.15)  தங்கம் விலை  கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து  ரூ.4,940 ஆகவும், சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, ரூ.39 ஆயிரத்து  520 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை  கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 143 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு  ரூ.1,144 அதிகரித்தது.  இந்நிலையில் இந்த வாரம் தொடங்கி இரு நாட்களில் சவரனுக்கு ரூ.384 உயர்ந்துள்ளது.

மோடி-ஜோபைடன் பேசியது என்ன...?

பாலி, நவ.15- இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு செவ்வாய், புதன் ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த உச்சி  மாநாட்டில்  பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி யும், ஜோபைடனும் செவ்வயான்று சந்தித்துப் பேசி னர். இந்தச் சந்திப்பில், முக்கியமான மற்றும்  வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங் களான, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா - அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டுச் செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர்.  இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தியா-அமெரிக்கா  இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்து வதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு  பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். குவாடு, எல்2யு2 அமைப்புகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடை யிலான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர் களும் திருப்தி தெரிவித்ததாக இந்திய வெளி யுறவுத்துறை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் குழுவில் (Quadrilateral Security Dialogue)  அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு நாடு களும் வழக்கமான உச்சி மாநாடுகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் போர்ப்பயிற்சி ஆகிய வற்றை பராமரித்து வருகிறது. எல்2யு2 (I2U2) குழுவில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள் ளன. இந்த அமைப்பு “கூட்டு முதலீடுகள் மற்றும் நீர், ஆற்றல், போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாது காப்பு ஆகியவற்றில் புதிய முயற்சிகளில்” பரஸ்பரம் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவ ராக இந்தோனேசியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.