states

img

2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: கடலூர் விவசாயிகள் வேதனை

 கடலூர், மே 27 - கடலூர் அருகே சூறாவளி காற்றால் இரண்டு லட்சம் வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடலூரில் வியாழக்கிழமை (மே 26)  இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய  கனமழை பெய்தது. இந்த காற்றுக்கு  பிரதானமாக வாழையை மட்டும் விவசா யம் செய்யும் மலை கிராமங்களான ராமாபுரம், சதங்குப்பம், ஓதியடிகுப்பம், காட்டு பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  ஒரு வாழை மரத்திற்கு ரூபாய் 150  ரூபாய் செலவு செய்த நிலையில்  தற்போது பூ வைத்து காய் காய்க்கும் நிலையில் வாழை மரங்கள் சாய்ந்தது மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  விவசாயி கள் தெரிவித்தனர். தமிழக அரசு உடனடியாக  கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.