உலகச் செய்திகள்
தங்கள் நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதை நிராகரிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்திடம் கியூபா கூறியிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்ததால் சில கியூப அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத் தாங்கள் நிராகரிப்பதாக கியூப அரசு குறிப்பிட்டுள்ளது.
44.6 சென்டிகிரேடு வெப்பத்துடனான காற்று ஸ்பெயினில் வீசி வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதி கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வட பகுதிகளில் சூடு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தென் பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு இத்தகைய நிலை இருக்கும். சஹாராவில் இருந்து வெப்பக் காற்று வருவதால் நாட்டின் பகுதிகள் பாதிக்கப்பட்டு ள்ளன என்று ஸ்பெயினின் காலநிலை முகமை கூறியுள்ளது.
தனது புதிய கண்டம் விட்டுக் கண்டம் தாவித்தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. கொரியப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தனது சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் வடகொரியா கோரிக்கை வைத்துள்ளது.