மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை
திருநெல்வேலி, அக்.30- பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரி சோதனை வெற்றிகரமாக நடந்தது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோ ஜெனிக் என்ஜின்களின் சோதனை நடை பெறுகிறது. இங்கு ககன்யான் திட்டத்திற்காக ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோ ஜெனிக் என்ஜின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோ ஜெனிக் என்ஜின் சி.20, இ11, எம்.கே.111 பரி சோதனை நடைபெற்றது. சுமார் 25 வினாடி கள் நீடித்த இந்த பரிசோதனை வெற்றிகர மாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்கு னர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற் றது.
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
தேனி, அக்.30- கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 14 நாட்களுக்கு பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தார். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி யின் நீர் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக் காணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரண மாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 17ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாத நிலையில் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீரானதால் கடந்த 14 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
‘தென்னகத்து போஸ்’ முத்துராமலிங்கத் தேவர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னை, அக். 30- கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் முத்து ராமலிங்க தேவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ெஜயந்தி விழா ஞாயிறன்று (அக்.30) கொண்டாடப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல மைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கி லேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர் முத்துராமலிங்க தேவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், “தென்னகத்து போஸ்” தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
52 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்
வேலூர், அக். 30- முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலு வையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலி யுறுத்தி முருகன் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முருகன் உண்ணா விரதத்தை கைவிடவில்லை. சிறையில் உணவை தவிர்த்து தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார். முரு கனின் உடல்நிலை மோசமானதால் அவ ருக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரிடம் உண்ணா விரதத்தை கைவிடக்கோரி சிறை அதி காரிகள் சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணா விரதத்தை கைவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை அவர் சிறை உணவை சாப் பிட்டார்.
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, அக். 30- தமிழகத்தில் திங்களன்று (அக்.31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டி இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங் களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திங்களன்று (அக்.31) திரு வள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.