கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, டிச.3- வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி செவ்வாயன்று நெல் லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில், மிக்ஜம் புயல் நிலைகொண்டுள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்க ளில் ஞாயிறு காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி யில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று (டிச.3) புயலாக வலுப்பெற்றது. இது தொட ர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கு திசையில் 290 கி.மீ தொலை விலும் நிலவி வருகிறது. நெல்லூருக்கு தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டி னத்துக்கு 550 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி யுள்ள வடதமிழக கடலோரப் பகுதி களை அடையும். அதன்பின்னர், வடக்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செவ் வாயன்று (டிச.5) முற்பகல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி காற்று
மிக்ஜம் புயல் கரையைக் கடக் கும்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும் அவ் வப்போது 100 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
பொது விடுமுறை
கனமழை மற்றும் புயல் காரண மாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர், ராணிப் பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் திங்கட் கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில் ராணிப்பேட்டை தவிர 4 மாவட் டங்களில் பொதுவிடுமுறை அறி வித்து மாநில அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.
தயார் நிலையில் மாநில அரசு
மிக்ஜம் புயலை எதிர்கொள்ள மாநில அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை முடுக்கிவிட்டுள் ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சா ரத்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் அதிகாரி களுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழையால் சென்னையில் ஏரிகளுக்கு வரும் தண்ணீர் அதி கரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் படிப்படியாக வெளியேற் றப்படுகிறது. இதனால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.