மதுரை, ஜன.11- குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. பழங்குடியின மக்களை இழிவு படுத்தும் வகையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தினால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேலாக குறவர் பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் குறத்தி என பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது.மேலும் இந்த ஆபாச நடனக் காட்சிகளை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து சமூகத்தின் பெயரை இழிவுபடுத்தி வருகின்றனர். குறவன் சமூகத்தினர் கல்வி, அரசு, தனியார் பணிகளில் பணிபுரியும் இந்த காலகட்டத்தில் இந்த சமூகத்தை இழிவு படுத்தும் நோக்கத்துடன் இச்செயல் நடக்கிறது. குறவன் - குறத்தி பெயரில் ஆடப்படும் ஆபாச நடனங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த செயல்கள் தொடர்ந்தால் எங்கள் சமூக மக்கள் தீண்டாமைக் கொடுமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இணைய தளத்தில் குறவன் - குறத்தி என தேடுதல் செய்யும் போது ஆபாச நடனங்கள் வருகின்றன.
எனவே, இணையதளத்தில் குறவன் - குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்கவும், ஆபாச நடனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு காவல்துறையினர் அனுமதியளிக்கக் கூடாது. மேலும் தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பாக பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குற வன் சமூக மக்களை பாதிக்கும் வித மாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதை தடுக்கவும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வித மாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடை பெற்று அதற்கான ஆதாரங்கள், வீடியோ பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.