உத்தரகண்டை தொ டர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் வீடு களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே அலிகார் பகுதியின் வீடு களில் விரிசல் ஏற்பட்ட நிலையில், யமுனை நதிக் கரையில் உள்ள பாக்பத் பகுதியில் உள்ள சில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை (தமிழ்நாடு), அகர்தலா (திரிபுரா), இம் பால் (மணிப்பூர்), போபால் (மத்திய பிரதே சம்), சூரத் (குஜராத்) ஆகிய 5 விமான நிலைய ங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவைக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்து ள்ளது. பணியாளர்களை நியமிக்கவும் விமான போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.
திமுக ஆட்சியில் பொறுப் பேற்ற பிறகு பள்ளி, கல் லூரிகளுக்கு அருகில் இருந்த 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள் ளன. தற்போதும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் இருந்தால் 2 நாட்களுக்குள் மாற் றப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப் பேரவையில் கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லைக்கு மற்றொரு அதிவிரைவு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில் வே அறிவித்துள்ளது.
ஜனவரி 17-ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள் ளது.
பாசுமதி அரிசியின் நறு மணத்தை கூட்டுவதற் காகவும், நிறத்தை மேம் படுத்த சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டி களுக்கு தடைவிதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிக முள்ள பகுதிகளில் இருந்து வரக் கூடிய மற்றும் நீண்டதூர விமான பயணம் மேற் கொள்ளும் பயணிகள் முககவசம் அணிந்து வர வேண்டும் என உலக சுகா தார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் பொங்கல் விழாவை திமுக கூட்டணி கட்சி கள், பாமக புறக்கணித் தன. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கலந்து கொண்டனர்.
அரசியல் விளம்பரங் களுக்கு பொதுநிதியை பயன்படுத்திய விவகா ரத்தில் ரூ.164 கோடி செலுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ போக்குவரத்து இருக்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய அணைகள் 2050 -ஆம் ஆண்டிற்குள் 26% நீர் சேமிப்பு திறனை இழக் கும் என ஐநா ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
பொருளாதாரத்தை நிலைப்படுத்தச் செய்யும் வியட்நாமின் கொள்கைகளுக்கு சர்வதேச நிதி அமைப்பு(ஐ.எம்.எப்) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும், உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதிலும் வியட்நாம் வெற்றியடைந்துள்ளது என்று ஐ.எம்.எப்.பின் துணை மேலாண்மை இயக்குநர் அன்டோய்னெட் சாயே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவக் கூட்டணியான நேட்டோவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைப்புக்கான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. தங்கள் கூட்டணியை விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டறிக்கை குறித்துக் கருத்து தெரிவித்த நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், “நாங்கள் மூன்றாவது நேட்டோ-ஐரோப்பிய யூனியன் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளோம். எப்போதையும் விட இது மிக முக்கியமானது” என்று குறிப்பிட்டார்.
2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட சீனா-லாவோஸ் ரயில் பாதைத் திட்டத்தில் 90 லட்சம் பேர் இதுவரையில் பயணம் செய்திருக்கிறார்கள். 1 கோடியே 20 லட்சம் டன் எடையுள்ள பொருட்கள் சரக்குகளாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல் பத்து நாட்களிலேயே சராசரியாக ஒருநாளைக்கு 29 ஆயிரம் பேர் பயணித்து வரு கிறார்கள்.