states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வன்முறை வெறியாட்டங்கள்: பாதிக்கப்பட்ட ஹரியானா மக்களை  சிபிஎம் குழுவினர் இன்று சந்திப்பு

புதுதில்லி, ஆக.9- பாஜக ஆளும் ஹரி யானா மாநிலத்தில் நூ மற் றும் குருகிராம் நகரங்களில் சமீபத்தில் வன்முறை வெறி யாட்டங்கள் நிகழ்ந்தன.இதில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அனுதாபமும் ஒருமைப்பா டும் தெரிவித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழு வியாழக்கிழ மையன்று அங்குசெல்கிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு தலைமை யில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ. ரகிம் மற்றும் வி.சிவதாசன் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.(ந.நி.)

கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவிற்கு முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரண மாக காலமானார். இவரது மறைவு செய்தி அறிந்து வருத்தமுற்றேன். பல  கல்வெட்டுகள், செப்பேடு கள், சுவடிகளைப் பதிப்பித்து தமிழுக்குப் பெருந்தொண் டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கும், தமிழறிஞர்களுக் கும் எனது ஆழ்ந்த இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டா லின் இரங்கல் தெரிவித்துள் ளார்.

ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன் யான் இன்ஜின் சோதனை வெற்றியடைந்துள்ளது. மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோத னை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் சோதனை வெற்றிஅடைந்தது.

செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன்

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள் ளது. கரூரில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய வீட்டின் முன்பு சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி யின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராக 4  முறை சம்மன் அனுப்பப் பட்டும், அவர் விசார ணைக்கு ஆஜராகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக.14 பள்ளிகளில் இனிப்பு பொங்கல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க சமூகநலன் மற்றும் மகளிர்  உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையின் மூலம் உத்தர விட்டுள்ளார். கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3 அன்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், ஆகஸ்ட் 14 அன்று இனிப்பு  பொங்கல் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.

நாளை முதல்  ஆக.15 வரை  தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில்

சென்னை,ஆக.9- ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே  சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆக.11 முதல் 15 ஆம் தேதி வரை  தொடர் விடுமுறையை ஒட்டி பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு  தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06051) மறுநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையை அடையும். அதேபோல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி  மாலை 5.50க்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ( 06052) மறுநாள்  காலை 4.10க்கு தாம்பரம் சென்றடை யும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி ரயில் நிலையங்க ளில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்  நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஆக.9- தமிழ்நாட்டில் வியாழனன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, ஆக.10 அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலை, புதுக்கோட்டை, திருச்சி,  பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.12 முதல் 15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ்  அளவில் இருக்கக்கூடும்.ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.  இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயனாளிகளுக்கு மானியத்தொகை

சென்னை, ஆக.9- தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது. அதற்காக  இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் ரூ. 10  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதி யுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானி யத் தொகை வழங்கப்படவுள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையை வழங்கினார்.

‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு தண்டனை உறுதி: நீதிமன்றம்

சென்னை, ஆக.9- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவ ருடைய மகள் சவுந்தர்யா இயக்கத் தில் கோச்சடையான் திரைப்படம் கடந்த  2014-இல் வெளியானது. இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூ ருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டை ஸிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து, இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் கடன் பெற்ற தாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹாருக்கு கடந்த  2014-இல் வழங்கிய ரூ.5 கோடிக்கு காசோலை பணமின்றி திரும்பியது. அதையடுத்து முரளி மனோகருக்கு எதிராக அபிர்சந்த் நஹார் சென்னை விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6  மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2021 டிச.4 அன்று தீர்ப்பளித்தது. மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க  வேண்டிய ரூ. 5 கோடிக்கு ஆண்டுக்கு  9 விழுக்காடு வட்டியும் சேர்த்து ரூ. 7.70 கோடியை வழங்க வேண்டுமென வும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை 6-வது பெருநகர கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.தஸ்னீம், இதுதொடர்பாக முரளி மனோகர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் முரளி மனோகருக்கு விதிக் கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி, அபிர்சந்த் நஹாருக்கு வழங்க  வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்க வும் முரளி மனோகருக்கு உத்தரவிட் டுள்ளார்.