சென்னை, ஜூன் 21- சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டத் தில் கோவைக்கு கூடுதலாக நீர் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோரியிருந் தார். அதற்கு கேரள அரசாங்கம், உட னடியாக செவி சாய்த்து தண்ணீர் வழங்கியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன் எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழ் நாடு - கேரள மக்களுக்கு இடை யிலான பிணைப்பை மேலும் வலுப் படுத்துவதாக உள்ளது. அதற்காக, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் நன்றி தெரி விக்கிறோம் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.