சென்னை, நவ.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பி.தியாகராஜன் திங்க ளன்று காலமானார். அவரது மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள இரங்கல் வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் தோழர் பி.சம்பத் அவர் களின் சகோதரருமான தோழர் பி.தியாகராஜன் உடல்நலக் குறைவால் திங்களன்று கால மானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் பி.தியாகராஜன் அவர்கள் கட்சியின் அம்பா சமுத்திரம் தாலுக்கா செயலா ளராகவும், நெல்லை மாநகர செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டவர். கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் 30 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றியவர். மின்வாரிய ஊழியரான அவர், தமிழ்நாடு மின்சார ஊழியர் மத் திய அமைப்பை (சிஐடியு) உரு வாக்குவதிலும், அதனை பல முள்ள அமைப்பாக மாற்றுவதி லும் முக்கிய பங்காற்றியவர்.
மத்திய அமைப்பின் சார்பில் மின் சார ஊழியர்களின் நலன்களுக் காகவும், ஒப்பந்த தொழிலாளர் களின் பணி நிரந்தரத்திற்காக வும், மின்வாரியத்தை தனியா ருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நடை பெற்ற துடிப்புமிக்க போராட்டங் களுக்கு தலைமையேற்றவர். மின்வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நெல்லை மாவட்டத்தின் தொழிற்சங்க பணியிலும், கட்சி பணியிலும் முழுமையாக தன்னை ஈடு படுத்திக் கொண்டவர். மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் மாவட்ட தலைவராக மற்றும் மாவட்ட செயலாளராக சிறப் பாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் சார்பில் திருநெல் வேலி மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட செயல்பட்ட அவர், அப்பகுதி மக் களின் நன்மதிப்பை பெற்றார். அவரது இழப்பு கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவ ரது மறைவால் துயருற்றிருக் கும் அவரது குடும்பத்தாருக் கும், தோழர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் அனு தாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இரங்கலில் கூறப் பட்டுள்ளது. தோழர் தியாகராஜன் மறை வுக்கு, மூத்த தலைவர் டி.கே. ரெங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்ம நாபன், ஆர்.கருமலையான், ஓய்வு பெற்ற மின் ஊழியர் மத் திய அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.