states

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பரமக்குடியில் சிபிஎம் போராட்டம்

பரமக்குடி, மார்ச் 6- பள்ளி மாணவி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்ய வலியுறுத்தி பரமக்குடியில்  திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி யார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்  தப்பட்டு  கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் அதிமுக கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட குற்ற வாளிகளுக்கு  ஜாமீன் வழங்காமல் விரைவு  சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தித் தண்டனை வழங்க வேண்டும்; இந்த வழக்கை அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரமக்குடி யில் திங்களன்று  தாலுகா செயலாளர் டி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர்  கே.ஜி. பாஸ்கரன் பேசுகையில், “பாலியல் வன் முறையில் தொடர்புடைய அனைவரையும்   கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் மற்றும் இடை நிறுத்தம் இல்லாத கல்வி உதவி வழங்க  வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய  பரமக்குடி  அதிமுக கவுன்சிலர் சிகாமணி யை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனி சாமி, இந்தச் சம்பவத்தை ஏன் கண்டிக்க வில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.  மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, பேசுகையில்,  “இந்தச் சம்பவத்தில் வலைப் பின்னல் போல பல்வேறு விஷயங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. இதில்  தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக சிபிசிஐடி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.மயில்வாகனன், என்.கலையரசன் எம்.சிவாஜி, எம்.ராஜ்குமார், தாலுகா செயலாளர்கள் வி.முருகன், பி. செல்வராஜ், பி.முத்துசாமி, எஸ்.போஸ், மகா லிங்கம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கண்ணகி, வான்தமிழ் இளம்பரிதி, தட்சி ணாமூர்த்தி,  ஆர்.முத்து விஜயன், ராசி என். போஸ், மாநில மகளிர் கூட்டமைப்பு  நிர்வாகி என்.ராமலட்சுமி, ஊழல் தடுப்புக் குழு உறுப்பினர் மேரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டுள்ள குற்ற வாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகப்போவ தில்லை என பரமக்குடி வழக்கறிஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் உறுதி யளித்துள்ளனர்.