சென்னை, மே 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப் பினரும், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட மூத்த தலை வருமான எழிலன் (எ) டி.ராமன் அவர்கள் (வயது 81) கால மானார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய இன் சூரன்ஸ் பென்சனர்கள் சங்கம் சார்பில் சென்னை வேளச்சேரி இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், வேளச்சேரி பகுதிக் குழு செயலாளர் வனஜ குமாரி, ரபீக், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் சார்பில் எஸ்.ரமேஷ் குமார், எஸ்.சிவசுப்ரமணி யன், குபேந்திரன், க.சுவாமி நாதன், மதுரைக் கோட்ட இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கத்தின் சார்பில் சுவாமி நாதன் உள்ளிட்ட தலைவர் கள் மலரஞ்சலி செலுத்தினர்.