சென்னை, மே 10- தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில், மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் பல தலைமுறையினராக, காலங்காலமாக குடி யிருப்பவர்கள் / பயன்படுத்துபவர்களின் நியாய மான கோரிக்கைகளை - முதல்வர் தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி, துணைத்தலைவர்- கொறடா எம். சின்னதுரை ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாடு அரசின், இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் நிலங்க ளில், இடங்களில் தமிழகம் முழுவதும் பல தலைமுறையினராக நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள், விவசாய நிலங்களில் குத்த கை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போருக்கு நியாய வாடகை, குத்தகை நிர்ணயிக்கிறோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை கடந்த ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்டது. பயனாளிகளால் கட்ட முடி யாத அளவிற்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டுமென பயனாளிகளும், பொதுமக்களும் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தாங்கள் அறிந்ததே.
கடந்த ஆட்சிக் காலத்தின் போது சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட இம்மக்களுக்கு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விடிவு காலம் பிறக்கும் என்று எண்ணியிருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையினரின் நடவடிக்கைகள் அவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில், மடங்களில் பல தலை முறையினராக குடியிருந்து வரும் பொது மக்கள், விவசாயம் செய்து வரும் குத்தகை விவ சாயிகள், சிறுகடை வைத்திருக்கும் வியாபாரி கள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இம்மக்களின் நீண்டகால, கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்றக்குழு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1. கோவில் இடங்களில் அடிமனை வாடகை தாரர்கள், குத்தகை விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போருக்கு வாடகையை பல மடங்கு உயர்த்தியும், உயர்த்தப்பட்ட வாட கையை முன்தேதியிட்டு நிலுவை வாடகை யாக பல லட்சங்களை ஒரே தவணையில் கட்ட வேண்டுமெனவும், கட்டத் தவறினால் “வீடு களை இடிப்போம்” என இந்து சமய அற நிலையத்துறையினரின் அச்சுறுத்தல் நட வடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.
2. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாடகை நிர்ணயக் குழுவில் பயனாளிகளின் பிரதிநிதிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை யும் உறுப்பினர்களாக இணைத்திட வேண்டுகிறோம்.
3. வாடகை / குத்தகை நிர்ணயம் செய்யும் போது சம்பந்தப்பட்ட பயனாளிகளின் கூட்ட அமர்வு கூட்டங்களை நடத்தி, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, வறுமைக் கோட்டி ற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஏற்றார் போல் வாட கை / குத்தகை நிர்ணயம் செய்திட வேண்டு கிறோம்.
4. அரசாணை 298 (20.7.2010)ன் படி 01.11.2001 தேதி நிலவரப்படி குடியிப்பு வகையினங் களுக்கு வாடகை நிர்ணயம் 0:10 என்று இருப்ப தை 0:05 என்று மாற்றி அமைத்திடவேண்டும். மேலும் வணிக பயன்பாட்டிற்கு உள்ள 0:30 என்றிருப்பதை 0:20 என்று மாற்றியமைத்திட வேண்டுகிறோம்.
5. கோவில் இடங்களில் குடியிருக்கும் பய னாளிகளின் வீடுகள் சேதமடையும் போது அதை பழுதுபார்ப்பதற்கும், புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் தடை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை விதிக்கக் கூடாது, குத்தகை நிலங்களுக்கு ஆர்.டி.ஆர். பதிவு செய்து கொடுக்க வேண்டுகிறோம்.
6. கொரோனா பெருந்தொற்று காலம் முழு வதிற்குமான வாடகை, குத்தகை தொகை யினை தள்ளுபடி செய்திட வேண்டுகிறோம்.
7. புதிய வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலை சட்டப்பிரிவு 78, 79ஐ பயன்படுத்தி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவது, வீடு களை பூட்டி சீல் வைப்பது போன்ற நடவடிக்கை களை முற்றிலும் நிறுத்திட வேண்டுகிறோம்.
8. அடிமனை வாடகைதாரராக உள்ள பய னாளிகள் பெயரிலுள்ள இடங்களில் பரப்பளவு சரியாக அளந்து கணக்கிடப்படாததால் குறைந்த இடத்திற்கு மிக அதிகமான வாட கை செலுத்தும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை முறையீடு செய்தும் இந்த குறை சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே, புகார் தெரிவித்துள்ளவர்களின் இடங்களை முறையாக அளவீடு செய்ய வேண்டுகிறோம்.
9. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலை யத்துறை மானியக் கோரிக்கை விவாதத் திற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர், அரசாணை 318-க்கான இடைக் கால தடையை நீக்கிட அரசின் சார்பில் விரை வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அந்த அடிப்படையில் உடன் சீராய்வு மனு தாக்கல் செய்ய உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
10.ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்று அடை யாளப்படுத்தப்படும் பயனாளிகள் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் அதன் மீது அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளி வர முடியாதபடி சிறையில் அடைக்கலாம் என்று உள்ள 798 திருத்தச் சட்டத்தை உடனே ரத்து செய்திட வேண்டுகிறோம்.
11.அடிமனை வாடகை செலுத்தும் பயனா ளிகள் கட்டிய மேல் கட்டுமானங்களை அடி மனை நீங்கலாக பதிவு செய்வதற்கு அனு மதிக்க வேண்டும். அடிமனைகளை வாரிசு தாரர்களுக்கும், மேல் கட்டுமானம் கைமாறி யவர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி பெயர் மாற்றம் செய்து தர வேண்டுகிறோம்.
12.அறநிலைய சட்டம் 34ன்படி பல தலைமுறை களாக கோயில் இடங்களில் குடியிருப்ப வர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலை யை தீர்மானித்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு, அவ்விடங் களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வர்களுக்கு இலவசமாக அரசே பட்டா வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.