இராமநாதபுரம், மே 28- இராமநாதபுரம் மாவட் டம், இராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடந்த செவ்வா யன்று ஒடிசா மாநில வாலி பர்களால் மீனவப்பெண் கொடூரமாக பாலியல் வன் கொலை செய்யப்பட்டார். மீனவப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ் மே 28 சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்து, ஆறுதல் கூறி னார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழக அரசிடம் வலியுறுத்திய நிவா ரணத் தொகை ரூ.25 லட் சத்தை பெற்றுத் தர முயற் சிக்கிறோம் என்றும் இது தொடர்பாக தமிழக முதல்வ ரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, குடும்பத்தில் ஒருவ ருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாங்கித் தர நிச் சயமாக முயற்சிப்பதாகவும் குடும்பத்தினரிடம் க.கனக ராஜ் உறுதியளித்தார். கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, அசோக், ராமச்சந் திர பாபு, மணிகண்டன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.