சென்னை, மே 27- எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட முதல் தமிழ்ப் பெண் முத் தமிழ்ச்செல்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்து,பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட முதல் தமிழக பெண் என்ற பெரு மையை பெற்றுள்ளார் முத்தமிழ்ச் செல்வி. விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவருடைய இந்த சாதனை பெரு மகிழ்ச்சி தருகிறது. 56 நாட்களில், 7150 மீட்டர் உயரத்தை எட்டிப் பிடித்துள் ளார். பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்க னையாக இருந்த முத்தமிழ்ச்செல்வி பல்வேறு விழிப்புணர்வு சாதனைகளை செய்து வந்திருக்கிறார். பெண் குழந் தைகளுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு எதிராகவும், வீரமங்கை வேலு நாச்சியார் புகழ் பரப்பிட குதிரையில் அமர்ந்து 1,389 முறை வில் அம்பு எய்தும் உள்ளார். ஏற்கனவே, இமாச்சல பிரதேசம், காங் யெட்சே பீக் -2 (KANG YATSE HILL) மலையில் 5500 மீட்டர் ஏறி சாதனை படைத்த அவர், எவரெஸ்ட் மலையை வென்றிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னு தாரணமாக சாதித்துள்ளார். அவரு டைய விடா முயற்சியை பாராட்டி மகிழ்கிறோம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.