states

img

பவுணர்மி அன்று கருத்தரிக்கக் கூடாதாம்: மாணவர்கள் முன்னிலையில் டிஐஜி ஆபாச பேச்சு சிபிஎம் கண்டனம்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமீபத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெண் குழந் தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷாதோல் மண்டல டிஐஜி சவிதா சோ ஹானே (பெண்),”நான் சொல்வதை செய்தால், நீங்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுப்பீர்கள். அது எவ்வாறு நிகழ வேண்டும் என்றால், முதல் விஷயம் பவுணர்மி அன்று கருத்தரிக்கக் கூடாது.  அடுத்து சூரியனை வணங்கி, நீர் ஊற்றி நமஸ்காரம் செய்தால் வலிமையான குழந்தை பிறக்கும். மறுபிறவியும் கிடைக்கும்” என அவர் கூறினார்.  சிபிஎம் கடும் கண்டனம் “மாணவர்கள் முன்னிலையில் டிஐஜி சவிதா சோஹானேவின் தவறான மற்றும் அபத்தமான அறிவுரை வன்மையாக கண்டிக்கத்தக்கது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில செயலாளர் ஜஸ்விந்தர் சிங் கண்ட னம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”மாணவர்கள் முன்னிலையில் மூட நம்பிக்கை மற்றும் பாலியல் ஆரோக்கி யம் என்ற பெயரில் ஆபாசமாக பேசிய டிஐஜி சவிதா சோஹானேவை உடன டியாக மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். அவர் கூறிய அனைத்தும் தவறான தகவல்கள் ஆகும். இந்த அபத்தமான அறிவுரைக்காக சவிதா சோஹானேவை தண்டிக்க வேண்டும். ஆளும் கட்சியான பாஜகவுக்கும், அதன் ரிமோட் கண்ட்ரோலான ஆர்எஸ் எஸ்ஸுக்கும் தன்னை விசுவாசமாக நிரூ பிக்கும் பந்தயத்தில் டிஐஜி சவிதா சோஹானேவின் வெற்றி பெறவே மாணவர் மனதில் நஞ்சை விளைக்கும் வகையில் பேசியுள்ளார். இது வன்மை யாக கண்டித்தக்கது” என ஜஸ்விந்தர் சிங் கூறினார்.