states

img

பிபிசி ஆவணப்படம் புதுச்சேரியில் திரையிடப்படும் - சிபிஎம் மாநில குழு அறிவிப்பு

பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தை புதுச்சேரி முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரையிடும் என்று புதுச்சேரி சிபிஎம் மாநில குழு தெரிவித்துள்ளது.
பிபிசி-யின் ஆவணப்படத்தை ஒன்றிய பாஜக அரசு குறுக்கு வழியில் தடை செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களிடம் சமூக செயற்பாட்டாளர்கள் கொண்டு சென்று வருகின்றனர். இந்த நிலையில், பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தை புதுச்சேரி முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரையிடும் என்று புதுச்சேரி சிபிஎம் மாநில குழு தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படம் திரையிடலை தடுப்பது சட்டவிரோதம், தடையால் உண்மையை மறைத்துவிட முடியாது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தின் சிபிஎம் மூத்த தலைவர் தா.முருகன் கூறியதாவது:  "உண்மையும் ஒருநாள் வெளியாகும்!அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்! பட்டுக்கோட்டையார் சொன்னதைப்போல 2002-இல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின் உண்மை இன்று வெளிவந்திருக்கிறது. இந்திய மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.