states

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 4 இடத்தில் சிபிஐ(எம்) போட்டி

பெங்களூரு, ஏப்.25- பாஜகவுக்கு எதிரான வாக்கு களைப் பிரிக்காமல், மதச்சார்பற்ற ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த முறை கர்நாடகா வில் 4 இடங்களில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கடந்த முறை 19 இடங்களில் சிபிஎம் போட்டியிட்டது. முன்னணியாக இல்லா விட்டாலும் வெற்றிபெற வாய்ப்புள்ள மூன்று இடங்களில் ஜனதா தளம் சிபிஎம்-க்கு ஆதரவளிக்கிறது. சிபிஎம் மூன்று முறை வெற்றி பெற்ற சிக்கபல்லப்பூர், பாகேபள்ளி உட்பட ஜனதா தளத்தின் ஆதரவு உள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளரும், பிரபல மருத்துவருமான டாக்டர். அனில்குமார் இங்கு கட்சி வேட்பாள ராக போட்டியிடுகிறார். சிபிஎம்-க்கு  ஒதுக்கப்பட்ட மற்றொரு தொகுதியான கல்புர்கியிலும் ஜேடிஎஸ் ஆதரவு அளித்துள்ளது.

இங்கு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், தாலுகா செயலாளருமான பாண்டுரங்க மாவின்கர் போட்டியிடுகிறார். ஜனதா தளம் ஆதரிக்கும் மூன்றா வது தொகுதி பெங்களூரு அருகே உள்ள கே.ஆர்.புரம். சிஐடியு தலை வரும், கட்சியின் மண்டலக் குழு உறுப்பினருமான நஞ்சே கவுடா இங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த பி.ஏ.பச வராஜ் இங்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2008 வரை வரத்தூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக கே.ஆர்.புரம் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில முன்னாள் செயலாளர் சூர்ய நாராயண ராவ் இங்கு வெற்றி பெற்றார். கோலார் தங்கவயல் தங்கச் சுரங்கங்களின் பூமியான  கோலாரில் உள்ள கேஜிஎப் தொகுதி யில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.தங்கராஜ் போட்டியிடுகிறார். 1951 முதல் 1962 வரை கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற தொகுதி. 1985இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.எஸ்.மணி வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸின் சிட்டிங் தொகுதியாக உள்ளது. இம்முறை ஜேடிஎஸ் ஒரு இடத்தில் காங்கிரஸுக்கும், மூன்று இடங்களில்  குடியரசுக் கட்சிக்கும் ஆதரவளிக் கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டியில் பாஜக வெற்றி பெறுவதை  தவிர்க்க புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. மே 10இல் தேர்தல் கர்நாடக சட்டப்பேரவையின் 224  இடங்களுக்கான தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடை பெறும். ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக போட்டி யிட்டாலும் பாஜக வேட்பாளர்களை தோற்கடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.