கொச்சி, ஏப்.25- கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (ஏப்.25) நாட் டின் முதல் ‘வாட்டர் மெட்ரோ’ சேவையைத் தொடங்கி வைத்தார். முன்னதாக திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் ஐஎன்எஸ் கருடா விமான தளத்தில் கேரள பாரம்பரிய உடை யில் வந்து இறங்கினார். கொச்சியில் இருந்து செவ்வாயன்று காலை பிரதமர் மோடி கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு சென்று, வந்தே பாரத் ரயில் சேவையையும், கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையையும் தொடங்கி வைத்தார். ‘வாட்டர் மெட்ரோ’: சிறப்பம்சங்கள் என்ன? * கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவை மூலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடை வர். சுற்றுலா பயணிகளை இது ஈர்க்கும். * கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’, அத்துறை முக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர்நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாடு இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும்.
இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்க ளில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்க நாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். நெரிசல் மிகுந்த நேரங்களில் உயர்நீதிமன்றம் - விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும். * பயணிகளின் வசதியைக் கருதி கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை பயணச்சீட்டு கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் செல்லக் கூடிய பயணிகள் பயண அட்டை பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர சந்தா ரூ.600, அரை யாண்டு சந்தா ரூ.1500 என்று நிர்ணயிக் கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை முனையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் ‘க்யூஆர்’ கோட்டை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். * இத்திட்டமானது ரூ.1,137 கோடி முத லீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெர்மன் வங்கி, கேஎஃப்டபிள்யு நிதி வழங்கியுள்ளது. கொச்சி கப்பல் கட்டுமான லிமிடெட் தான் வாட்டர் மெட்ரோ படகுகளை கட்டமைத்துள்ளது. * முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவை யில் இணைக்கப்படுகின்றன.