states

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பேரவையில் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 23- பட்டாசு ஆலைகளின் பாது காப்பையும் தொழிலாளர்க ளின் நலனையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை யில் உறுப்பினர்கள் வலியுறுத்தி னர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 23 அன்று காஞ்சிபுரம் வெடிவிபத்து குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை வி.பி.மாலி, காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள குருவி மலை வசந்த் நகர் பகுதியில் ‘நரேஸ் பயர்ஸ்’என்கிற பட்டாசு  ஆலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 10 பேர் மரண மடைந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்த ஆலையை சுற்றியுள்ள 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை செயல்பட்டு வந்த கட்டி டங்கள் முழுவதும் இடிந்து தரை மட்டமாகியுள்ளது. இங்கு வேலை செய்து வந்தவர்கள் அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.  இந்த பட்டாசு ஆலையில் எந்த விதமான பாதுகாப்பு விதிமுறை களும் முறையாக கடைப்பிடிக்கப் படவில்லை என்பது தெரிகிறது.  ஊழியர்களுக்கு எந்தவிதமான விபத்து காப்பீடும் செய்யப் பட்டதாகவும் தெரியவில்லை.  ஏற்கனவே, தமிழ்நாட்டில் இது போன்ற தொடர் வெடி விபத்து களும் அதை ஒட்டிய உயிர்ப்பலி களும் நடைபெற்று வரக்கூடிய சூழலில், அரசு அனுமதி பெறாமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நடைபெறும் அனைத்து பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும், பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகிறதா என்பதை தொழிற்சாலை ஆய் வாளர்கள் தொடர்ந்து கண் காணிப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உத்திரமேரூர் க.சுந்தர்(திமுக), மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் (அதிமுக), செல்வ பெருந்தகை (காங்.), ஜி.கே. மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி(விசிக) ஆகியோரும் பேசினர். இதற்கு விளக்கம் அளித்த வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,“ 1991  ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அந்த ஆலையில் 15 கிலோ  அளவுக்கே வெடி மருந்துகளை பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், அந்தப் பகுதி யில் திருவிழா அதிகமாக நடந்து வருவதால் அதிக அளவுக்கு மருந்தும் தொழிலாளர்களையும் பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர்” என்றார். இனி வரும் காலங்களில் எந்த  மாவட்டத்தில் பட்டாசு தொழிற் சாலை இருந்தாலும் அதை ஒழுங்கு படுத்தி தேவையான பயிற்சிகளும் வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடை யும் வழங்கப்படும்.  பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்து பயிற்சி அளிப்பதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறி வுறுத்தப்படும் என்றும் கூறினார்.