கார்ப்பரேட் நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டால் அதன் நிறுவனர்களின் தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகள், வராக்கடனுக்காக ஏலம் விடலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் அமைந்த மூவர் பெஞ்ச் ஒரு வரலாற்று தீர்ப்பை அண்மையில் வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு கடன் வழங்கும் பொழுது அதன் நிறுவனர்களிடம் தனிப்பட்ட கேரன்டி (உத்தரவாதம்) வாங்குவது வங்கிகளின் வழக்கம். IBC 95-100 பிரிவு அதிகாரத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 200க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்ப ட்டிருந்தன. வழக்கு தொடுத்தவர்களில் முக்கியமான வர்கள் பெயர்கள் பின்வருமாறு: அனில் அம்பானி, சஞ்சய் சிங்கால், ஆர்த்தி சிங்கால், லலித் ஜெயின், அட்டுல் புஞ்ச், அஜய் மெஹரா, யோகேஷ் மேஹரா போன்ற திமிங்கலங்கள். 1,63,916 கோடி ரூபாய் வராக்கடன் வசூலுக்காக தீர்ப்பாயங்களில் 2289 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வங்கிகளின் கைகளில் மிகப்பெரிய ஆயுதத்தை வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு.
-ஆறுக்குட்டி