சென்னை,ஜூன் 28- தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்தால் கொள்முதல் விலைக்கு ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையை புதன்கிழமை (ஜூன் 28) ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே (கிலோ ரூ .60) தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.