ஜிப்மர் மருத்துவமனையில் அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற ஜிப்மர் இயக்குநரின் அறிவிப்பு சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இவை அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்கள், பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் ஆகியோர் இதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஏதேனும் உதவி தேவையெனில் இந்தி பிரிவை தொடர்புகொள்ளும்படி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டங்களை எழுப்பி வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி என்று ஒற்றைத்துவத்தை திணிக்கும் முன்னேற்பாடாக இந்தி மொழியை கட்டாயப்படுத்து வருகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கை என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.